இந்த விபத்தில் டிரைவர் சின்னப்பாண்டி (35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த சந்தோஷ்செல்வம் (7), மரியசெல்வராஜ் (37), பாத்திமாமேரி (31), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40) சண்முகத்தாய் (53), ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் காயம் அடைந்த 7 பேரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
* தலா 2 லட்சம் நிவாரணம் முதல்வர் உத்தரவு
விபத்தில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.