எதிர்க்கட்சி தலைவராக கார்கே செய்ய வேண்டிய வேலைகளை செய்கிறீர்கள். எனவே அவரது இருக்கையில் நீங்கள் வந்து அமருங்கள்’’ என்றார். இதனால் கடுப்பான கார்கே, ‘‘வர்ணா (சாதி) அமைப்பை கொண்டு வராதீர்கள். அதனால்தான் ரமேஷை நீங்கள் புத்திசாலி என்கிறீர்கள், நான் மந்தமாக இருக்கிறேன் என்கிறீர்கள். இந்த இருக்கையில் நான் இருக்கிறேன் என்றால் அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நாட்டு மக்களும்தான் காரணம்’’ என்றார். இதையடுத்து தன்கருக்கும் கார்கேவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.