இதற்கிடையில் மர்ம நபர்கள் மலைக்கு தீ வைத்துள்ளார். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென தீ பரவி எரிந்து கொண்டிருந்த நிலையில், அருகே இருந்து கொட்டகைக்கும் தீ பரவியது. கொட்டகை மஞ்சம் புல்லால் அமைந்திருந்ததால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில் கொட்டகையில் இருந்து 9 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தது.
4 ஆடுகள் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பியது. அதன் பின்னர் அங்கு வந்த ஏழுமலை கொட்டகை முழுவதும் எரிந்து ஆடுகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து தானிப்பாடி கால்நடைத்துறைக்கும், போலீசார், கிராம நிர்வாக அலுவருக்கும் தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் அங்கு வந்த அதிகாரிகள், போலீசார் மலைக்கு தீ வைத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆடுகள் உயிரிழந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளார்.