பணத்தை பெற்று கொண்ட செந்தில் குமார் ரயில் நிலையங்களில் நடைமேடையில் பெட்டி கடை வைத்து தருவதாக பணத்தை பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி அவர் பெட்டிக்கடையும் ஏற்படுத்தி தரவில்லை என்றும் மேலும் இது தொடர்பாக பணத்தை கேட்டால் அவர் ஏமாற்றுவதாக தெரியவந்த நிலையில், இது தொடர்பாக நவமணி பல புகார்களை பாஜக நிர்வாகிகளிடம் சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக நிர்வாகியான மாவட்ட செயலாளர் செந்தில் குமார் நவமணியை மிரட்டியுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த நவமணி நேற்று தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை கடிதமாக எழுதி வைத்துள்ளார். பாஜக நிர்வாகியான செந்தில் குமார் தன்னிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாகவும் பணத்தை கேட்டால் மிரட்டுவதாகவும் அதனால் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவிட்டு தூக்கமாத்திரைகளை அதிகமாக உட்கொண்டுள்ளார்.
இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாஜக பெண் நிர்வாகியிடம் பண மோசடியில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் செந்தில் குமாரை தண்டையார்பேட்டை போலீசார் இன்று அதிகாலை அவரது வீட்டில் கைது செய்துள்ளனர். பாஜக பெண் நிர்வாகியிடமே பாஜக மாவட்ட செயலாளர் செந்தில் குமார் மோசடியில் ஈடுபட்டது. பாஜக நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.