மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர் ரேணுகா ஆகியோர் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் மகேஸ்வரன், பரத் ஆகியோர், ஊழியர்கள் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். மேலும் தடுப்பூசி செலுத்தியதற்கு அடையாளமாக நாய்கள் மீது வண்ணம் பூசப்பட்டது. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அங்கு கொண்டு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுகுறித்து தலைமை கால்நடை மருத்துவர் கமால் உசேன் கூறுகையில், இந்த தடுப்பூசி தனியார் மருத்துவமனையில் செலுத்தினால் ரூ.300 ஆகும். மாநகராட்சி இலவசமாக இதை செலுத்தி வருகிறது. தெருநாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படும்,’’ என்றார்.