சென்னை : மக்களவை தேர்தலில் த.மா.கா. சார்பில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நாளை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க தொண்டர்கள் ஆர்வம் காட்டுவதால், விருப்ப மனு அளிக்க காலக்கெடு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் குழு விரைவில் அமைக்கப்படும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.