கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூசத் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய சிறார் உள்பட 6 பேர் கைது செய்யபட்டுள்ளனர். கஞ்சா போதையில் இருந்தவர்கள் அங்குள்ள பெண்களை கிண்டல் செய்ததை காவலர் ரமேஷ் தட்டிக் கேட்டதால் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய ராமலிங்கம் (18), ரவி(23), ஞானசேகர்(17), பரஞ்சோதி(23), கௌரி சங்கர்(21). சூரியகுமார்(22) ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.