இதுகுறித்து, அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதிலளித்தனர். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்தனர். அதில் மேல்புறமாக இருந்த தின் பண்டங்களை அகற்றி பார்த்தபோது, உயிருள்ள நட்சத்திர ஆமைகள் தாய்லாந்துக்கு கடத்தி செல்லப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை எண்ணியபோது, ரூ.15 லட்சம் மதிப்பிலான 400 நட்சத்திர ஆமைகள் இருந்தன. பின்னர், 3 பேரின் தாய்லாந்து பயணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் ரத்து செய்து, அவர்களை கைது செய்தனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆமைகள் மற்றும் 3 பயணிகளை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.