சென்னை: விருதுநகர் மற்றும் சேலத்தில் ரூ. 2,483 கோடியில் புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ரூ. 111 கோடியில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.