Sunday, September 8, 2024
Home » டெட்டனஸ் தடுக்க… தவிர்க்க!

டெட்டனஸ் தடுக்க… தவிர்க்க!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

டெட்டனஸ் ஒரு தொற்றக்கூடிய நோய். இந்நோய் மண்ணில் வாழும் ஒருவகை பாக்டீரியாவினால் உடலில் உள்ள காயம் மாசடையும்போது ஏற்படுகிறது. டெட்டனஸ் ஏற்படுத்தும் பாக்டீரியம் க்ளோஸ்ட்ரிடியம் டெடானி – யானது ஒரு கடினமான உயிரினம். இது ஸ்போர் எனும் நிலையில் பல ஆண்டுகள் மண்ணில் உயிர் வாழக்கூடியது.உடலில் உள்ள காயம் பாக்டீரியா ஸ்போரினால் மாசு அடையும் போது டெட்டனஸ் ஏற்படுகிறது. இந்த ஸ்போர்கள் ஊக்குவிக்கப்பட்டு கிராம்- பாசிடிவ் பாக்டீரியாவாக மாறி எண்ணிக்கையில் பெருக்கம் அடையும்போது நோய்த்தொற்று ஆரம்பமாகிறது மற்றும் இவை சக்திவாய்ந்த நஞ்சுப்பொருளினை உற்பத்தி செய்கிறது.

இந்த நஞ்சு தசைகளை பாதிக்கிறது. டெட்டனஸ் ஸ்போர்கள் எல்லா சீதோஷ்ண நிலையிலும் மண், தூசி மற்றும் விலங்கினக்கழிவுகளில் காணப்படுகிறது. கிழிந்த காயமுள்ள உடற்பகுதி வழியாக, இந்த பாக்டீரியம் நமது உடலில் நுழையும். அதாவது சிதைவடைந்த நகங்கள், சிராய்ப்பு வெடிப்புகள் அல்லது பூச்சிக்கடிகள், தீக்காயங்கள், தோலில் ஏற்படும் அனைத்து கிழிச்சல் காயங்கள் வழிகளில் நுழையும்.

இந்நோய் 4 வகையாக காணப்படும்

பொதுவான டெட்டனஸ், இது உடலிலுள்ள அனைத்து எலும்புத்தசைகளையும் பாதிக்கும். இது அதிக பொதுவான மற்றும் மிக மோசமான வகையாகும்.வட்டார டெட்டனஸ் இது பாக்டீரியாவால் நோய்த்தொற்று கண்ட காயத்தில் அல்லது அதைச்சுற்றியுள்ள தசைகளில் தோன்றும்.ஸ்பேலிக் டெட்டனஸ். இது தலையில் காயம் அல்லது காதுகளில் நோய்த் தொற்று ஏற்பட்ட ஓரிரு நாட்களில் முதலில் முகத்தில் உள்ள ஒன்று அல்லது இரண்டு தசைகளை விரைவாக பாதிக்கும்.

நியோநேடல் (புனிற்றுப்பருவ) டெட்டனஸ் இது பொதுவான டெட்டனஸ் போன்றது. ஆனால் ஒரு மாதத்திற்கும் குறைந்த வயதுடைய குழைந்தைகளை மாத்திரம் பாதிக்கும். இந்த நிலை வளர்ந்த நாடுகளில் அரிதாக காணப்படும்.

டெட்டனஸ் – க்கான காரணங்கள்

க்ளோஸ்ட்ரிடியம் டெடானி எனும் வகையான பாக்டீரியா இந்நோய் தோன்ற காரணமாகும். இந்த பாக்டீரியா இரண்டு உருவில் காணப்படும்: ஒன்று ஸ்போர் / சிதில் விதை (உறங்கு நிலை) மற்றொன்று வளர்வாக்கச்செயல்பாடுடைய செயல்நிலை (செய்வினை வடிவான) இவை எண்ணிக்கையில் பெருகும்.ஸ்போர்கள் மண், தூசி மற்றும் விலங்கினக்கழிவுகளில் இருக்கும். இங்கு இவை பல வருட காலங்கள் உயிருடன் இருக்கும். இந்த ஸ்போர்கள் அதிகமான மற்றும் குறைந்த என எல்லா தட்ப வெப்பநிலைகளிலும் உயிர் வாழக்கூடியவை.

பொதுவாக, காயங்கள் டெட்டனஸ் ஸ்போர்களினால் மாசடையும். இருந்தபோதும் டெட்டனஸ் ஸ்போர்கள் முளைத்து வளர்வாக்கச் செயல்பாடுடைய பாக்டீரியாவாக மாறும்போது டெட்டனஸ் – ஐ தோற்றுவிக்கும்.செயல்வினை வடிவான பாக்டீரியா, டெடானோலைஸின் மற்றும் டெடானோஸ்பாஸ்மின் எனும் இரண்டு வகை புறநஞ்சுவினை வெளிவிடுகிறது. டெடானோலைஸினின் வேலை என்னவென்பது தெளிவாக அறியப்படவில்லை, ஆனால் டெடானோஸ்பாஸ்மினே நோய் தோன்ற காரணமாகும்.

தோலில் திடீரென தோன்றும் காயங்களை தொடர்ந்தே இந்நோய் தோற்றுவிக்கப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில், குத்துக்காயங்கள், கிழிப்புக்காயங்கள் அல்லது கீறல் காயங்களால் ஏற்படுகிறது.டெட்டனஸ் ஏற்பட காரணமான பிற காயங்களாவன அறுவைச்சிகிச்சை நசுங்குகாயங்கள் சீழ்கள் /  சீழ்க்காயங்கள் குழந்தை பிறப்பு போதை மருந்து பயன்படுத்துபவர்கள், ஊசி போடுமிடம்இறந்த திசுக்களுடன் உள்ள காயங்கள் (உதாரணத்திற்கு – தீக்காயங்கள், நசுங்குக்காயங்கள்) அல்லது வேற்று பொருட்கள் (பாரின் பாடி) போன்றவைகளால் டெட்டனஸ் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

டெட்டனஸ் – ற்கு எதிரான நோய்த்தடுப்பாற்றலூட்டும் ஊசி போட்டுக்கொள்ளாதவர்கள் மற்றும் நோய்த்தடுப்பாற்றலைப் பேண கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களில் டெட்டனஸ் நோய் ஏற்படலாம்.

டெட்டனஸ் நோய் அறிகுறிகள்

பொதுவாக டெட்டனஸ்ஸின் ஆரம்ப முறையீடு, கீழ் காண்பவைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். உறுத்துணர்வு, தசைப்பிடிப்பு, தசை நோவு / நோய், பலவீனம் அல்லது உணவு விழுங்குவதில் கடினம் போன்றவை பொதுவானவை.

முகத்திலுள்ள தசைகள் பெரும்பாலும் முதலில் பாதிக்கப்படும். வாய்க்கட்டு (ட்ரைஸ்மஸ்) அல்லது தாடையிருக்கு / தாடை ஒட்டிக்கொள்ளுதல் மிகப்பொதுவானதாகும். வாய் அசைக்க காரணமான தாடை தசைகளில் இசிப்பு (ஸ்பாஸம்) ஏற்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது.தசை இசிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் போதும் மற்றும் இதன் விளைவாக தலை பின் பக்கம் வளைந்து மற்றும் உடல் முன்பக்கம் வளைந்து ஒபிஸ்தோடொனஸ் எனப்படும் உடல் பின்பக்கம் வளைந்துள்ள நிலை ஏற்படுகிறது. தசை இசிப்பு போதுமானளவு அதிகரித்து எலும்புகளை உடையவும் செய்யும். மற்றும் எலும்பு இணைப்புகள் இடம் மாறியமையவும் செய்யும்.

மிக மோசமான நிலையில், குரல் நாண் (வேகல் கார்ட்) அல்லது சுவாசத் தசைகளிலும், தசை இசிப்பு ஏற்படும்.தலை டெட்டனஸ்ஸில் தாடை ஒட்டிக்கொள்வதுடன் கூடுதலாக முகத்திலுள்ள ஒன்று அல்லது இரண்டு பிற தசைகளிலும் இசிப்பு ஏற்படும். மூன்றில் இரண்டு பங்கு சமையங்களில் பொதுவான டெட்டனஸ்ஸாக உருவெடுக்கலாம்.வட்டார டெட்டனஸ்ஸில், தசை இசிப்பு, அடிபட்ட இடம் அல்லது அதைச் சுற்றி ஏற்படும். இந்த நிலை வளர்ந்து பொதுவான டெட்டனஸ்ஸாக வளரும்.

நியோநேடல் (புனிற்றுப்பருவ) டெட்டனஸ் பொதுவான டெட்டனஸ்ஸை ஒத்தது. ஆனால் இது ஒரு மாதவயதிற்குட்பட்ட குழந்தைகளில் மாத்திரம் ஏற்படும். பிறந்த குழந்தைகள் உறுத்துணர்வுள்ளவர்களாகவும் மற்றும் பால் உறிஞ்சும் தன்மை குறைந்தும் அல்லது விழுங்குவது கடினமாகவும் இருக்கலாம்.

டெட்டனஸ் நோய்த்தடுப்பு

செயல்திறன்மிக்க தடுப்பாற்றல் முறையின் மூலம் / முறையினால் முழுமையாக தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்றுதான் டெட்டனஸ். டெட்டனஸ் டாக்ஸாய்ட், அறிமுகப்படுத்திய 1920 – ஆண்டுகளில் இருந்தே, பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. டெட்டனஸ் டாக்ஸாய்ட் என்பது வேதிப்பொருட்கள் அல்லது வெப்பத்தினை கொண்டு நஞ்சுத்தன்மையை குறைத்த ஒருவகை செயல்திறன் நீக்கப்பட்ட டெட்டனஸ் நஞ்சுவாகும், ஆனால் எதிர்ப்பாற்றல் திறனைக் கொண்டுள்ளது.

டெட்டனஸ் டாக்ஸாய்ட் தனியாகவோ அல்லது பெரும்பாலான நேரங்களில் மூன்று கூறுகளையுடைய தடுப்பூசியில், ஒரு கூறாகவோ கிடைக்கிறது. இது குழந்தைகளுக்கு முதன்மைத் தடுப்பூசியாக டிப்தீரியா டாக்ஸாய்ட் மற்றும் பெர்டுஸிஸ் வாக்சினுடன் (டீபிடி) கலந்தும் மற்றும் வளர்ந்த குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு டிப்தீரியா டாக்ஸாய்டாகவும் கிடைக்கும்.
முதன்மை தடுப்பாற்றலுக்காக, பெரியவர்களுக்கு, டெட்டனஸ் ஊசியினை இரண்டு முறை, 4 அல்லது 6 வார இடைவெளிகளில் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது ஊசி, இரண்டாம் ஊசிக்குப்பிறகு 6 முதல் 12 மாதங்கள் கழித்து கொடுக்கப்படவேண்டும். 10 வருடங்களுக்கு ஒருமுறை, நோய் எதிர்ப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளும் வண்ணம், கூடுதல் மருந்தானது கொடுக்கப்படவேண்டும்.

டெட்டனஸ் தடுப்பாற்றலூட்டும் ஊசி குறிப்பாக 50 வயது நிரம்பியவர் மற்றும் அதைவிட வயதானவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் டெட்டனஸ் இவ்வயதினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. டெட்டனஸ் தடுப்பூசி கீழ்க்காணுபவர்களுக்கு அவசியம் தரப்படவேண்டும்.

ஆரம்ப தடுப்புஊசி போட்டுக்கொண்டோமா என்ற ஐயம் உள்ளவர்கள்.சூடான, குளிர்ந்த தட்பவெப்ப நிலையிலுள்ள நாடுகளுக்கு பயணம் செல்பவர்கள்.எறு / உரம் அல்லது தூசியுடன் கூடிய விவசாய நிலத்தில் வேலை செய்பவர்கள்.வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்பு / சீவல் காயத்திற்கு உள்ளாகும் வேலை உள்ள நபர்கள்.

தடுப்பாற்றலுட்டும் ஊசி போடாத அல்லது போதுமான அளவு தடுப்பாற்றலூட்டும் ஊசி போடாத அல்லது சுகாதரமற்ற சூழலில் குழந்தை பெற்றுக்கொண்ட கர்பிணிப் பெண்கள். தடுப்பூசி போட்ட பின்னர் நோய் எதிர் பொருட்கள் தாயிலிருந்து குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் செல்கிறது.

You may also like

Leave a Comment

10 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi