இங்கிலாந்துடன் 4வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா

ராஞ்சி: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் 106ரன் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட்டில் 434ரன் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றியை பெற்றது. அதனால் இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் ஆட்டம் இன்று ராஞ்சியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட்டில் வெல்வதின் மூலம் இந்தியா தொடரை கைப்பற்றும். அதே நேரத்தில் இங்கிலாந்து வென்றால் தொடரை சமநிலைக்கு கொண்டு வருவதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பையும் தக்க வைக்கும். ஆகையால் இன்றைய ஆட்டம் 2 அணிகளுக்கும் முக்கியமான ஆட்டம். அதற்கேற்ப ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மாற்றங்களுடன் களம் காண உள்ளது. பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் 2வது டெஸ்ட்டில் விளையாடிய ஆகாஷ்தீப் அல்லது முகேசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாருக்கான வாய்ப்பை பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் நேற்று உறுதி செய்துள்ளார். அதே போல் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் வெற்றி அவசியம் என்பதால் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடவே ஆடும் 11பேர் அணியை இங்கிலாந்து நிர்வாகம் நேற்றே அறிவித்து விட்டது.

அதன்படி ரெஹன் அகமது, மார்க் வுட் ஆகியோருக்கு பதில் சோயிப் பஷீர், ஒல்லி ராபின்சன் வாய்ப்பு பெற்றுள்ளனர். தொடரை வெல்ல மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற 2 அணிகளுக்கும் வெற்றி முக்கியம், அதனால், இன்று தொடங்கும் 4வது டெஸ்ட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* அணி விவரம்:
இந்தியா: ரோஹித்(கேப்டன்), துருவ் ஜூரல், ஸ்ரீகர் பரத்(விக்கெட் கீப்பர்கள்), ஜெய்ஸ்வால், சுப்மன், பட்டிதார், சர்பராஸ் கான், தேவ்தூத் படிக்கல், ஜடேஜா, அஷ்வின், அக்சர், குல்தீப் , வாஷிங்டன், சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்

* இங்கிலாந்து ஆடும் அணி: பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்கள்), ஜாக் கிரவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஆண்டர்சன், சோயிப்.

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை