கோவையில் தீவிரவாத சிறப்பு தடுப்பு பிரிவு துவக்கம்

கோவை: கோவையில் புதிதாக சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு எஸ்பியாக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஒரு டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர் உள்பட 40 போலீசார் பணிபுரிய உள்ளனர். இந்த தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இயங்கி வருகிறது. கோவையை தலைமையிடமாக கொண்டு திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் என மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள் இங்கே விசாரிக்கப்படும். மேலும் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா), ஆயுத தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளது.

இந்த தீவிரவாத தடுப்பு பிரிவானது விரைவில், 90 போலீசாருடன் விரிவாக்கப்படும். இந்த பிரிவுக்கு விரைவில் தனி கட்டிடம் கட்ட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒரு இடம் விரைவில் இறுதி செய்யப்பட்டு கட்டடம் கட்டப்படும். இந்த தீவிரவாத தடுப்பு பிரிவில் அனைத்து வகையான ஆயுதங்களை கையாள தெரிந்த தாக்குதல் குழு, உளவு தகவல்களை சேகரிக்கும் குழு உள்ளிட்ட குழுக்கள் இடம்பெற்றிருக்கும். உளவு பிரிவினர் பல்வேறு தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களின் விபரங்களை கொண்ட தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற மாநிலத்தில் உள்ள உளவு பிரிவினருடன் இந்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும் என தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி