பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ: கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் திணறல்

மதுரை: மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக், இரும்பு குடோனில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இப்பகுதி முழுக்க கரும்புகை சூழ்ந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மதுரை உத்தங்குடி பகுதியில் பழைய பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட பொருட்களை காலி இடத்தில் கொட்டி குவித்து வைத்து குடோனாக பயன்படுத்தி வருகின்றனர். இன்று காலை பழைய பொருட்களில் திடீரென தீப்பிடித்தது. இதில் இப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.

அருகாமையில் தனியார் மருத்துவமனை நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஏற்கனவே, இதே பழைய பொருட்கள் குடோனில் முன்பு தீப்பிடித்தது. இது இரண்டாவது சம்பவமாகும். தற்போது முழுமையாக பொருட்கள் எரிந்து நாசமாயின. இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பாலமேடு அருகே டிராக்டர் குறுக்கே வந்ததால் சாலையோரம் பாய்ந்த வேன்: 4 ஆசிரியைகள், டிரைவர் காயம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

சேலத்தில் 260 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!!