மொரோக்கோவின் மராகேச் என்ற இடத்தில் இருந்து 79 கி.மீ தூரத்தை மையமாக கொண்டு 7.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூக்கத்தில் இருந்த மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த நிலநடுக்கமானது சுமார் 20 நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த கடும் நிலநடுக்கத்தை தொடர்ந்து மொராக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,037ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.