தென்காசி : பூலித்தேவரின் 309 பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் செப்.2 காலை 10 மணி வரை தடை உத்தரவு என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.