தென்காசி: தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே ரதமுடையார்குளம் கிராமத்தில் மதுபானத்தில் போதை மாத்திரை கலந்து விற்றவர் கைது செய்யப்பட்டார். மதுபானத்தில் போதை மாத்திரை கலந்து விற்பனைக்கு வைத்திருந்த மாரிமுத்து (35) என்பவரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட மாரிமுத்துவிடம் இருந்து 20 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.