கோயில்களில் இனிமேல் யானைகள் வாங்கக்கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோயில்களில் இனிமேல் யானைகள் வாங்கக்கூடாது என அனைத்து கோயில்களுக்கும் அறிவுறுத்தும்படி அறநிலையத்துறை அரசு செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் 27.02.2023 அன்று உத்தரவிட்டார். அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு இன்று (19.06.2023) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வரப்பெற்றதில் தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்காலத் தடை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!

மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!