கோயில் திருவிழாவில் தகராறு; 11 பேர் கைது

 

கிருஷ்ணகிரி: பர்கூர் எம்ஜிஆர் நகரில், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி, கடந்த 29ம் தேதி பாட்டு கச்சேரி நடத்தப்பட்டது. அப்போது, அங்கு வந்த பூமாலை நகரைச் சேர்ந்த சரண்(22) என்பவர், ஒரு குறிப்பிட்ட நடிகர் நடித்த திரைப்பட பாடல்களை பாடுமாறு வலியுறுத்தியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(23), ஆனந்த்(20) மற்றும் யுவராஜ் ஆகியோர் சரணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டனர். இதுகுறித்து சரண் கொடுத்த புகாரின்பேரில், பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டன் மற்றும் ஆனந்த், யுவராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் பூமாலை நகரைச் சேர்ந்த நவீன்குமார்(24), சரண், வேலாயுதம்(24), சந்தோஷ்குமார்(25), சூர்யா(21), பத்மநாபன்(21), அருண், ஹரிச்சந்திரன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 11பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு