கோயில் திருவிழாவில் சோகம்: மின்சாரம் பாய்ந்து பிளஸ்2 மாணவர் பலி

மன்னார்குடி: திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்2 மாணவர் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த காடுவாக்குடியை சேர்ந்த குணசேகரன் மகன் ஹரிஷ் (17). விளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். பள்ளி விடுமுறை என்பதால் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கோட்டூர் அடுத்த புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவில் கோயிலின் பின்புறம் அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஹரிஷ் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் தேங்கி இருந்த மழைநீரில் நின்றபடி வேலை பார்த்து கொண்டிருந்த ஹரிஷ் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட ஹரிஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்