ஒரு சில பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டுமே நந்தவனம் முறையாக பராமரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உள்ளது. கோயில்களில் உள்ள மரங்கள், குளங்கள் மற்றும் நந்தவனத்தை பராமரிக்க பாதுகாவலரை நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு, கோயில்களில் உள்ள நந்தவனங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அக். 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.