ஒவ்வொரு வருடமும் மாரம்பாடி ஆலய திருவிழாவின்போதும் மல்வார்பட்டி கிராம மக்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மல்வார்பட்டியில் ஒவ்வொரு ஊர் முக்கியஸ்தர் தேர்வு செய்யப்படும்போதும், மாரம்பாடி சர்ச்சில் இருந்து வந்து அவர்களுக்கு பதவியேற்பு செய்து பரிவட்டம் கட்டி வருவதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் மாரம்பாடியை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் கும்பாபிஷேகங்களிலும் எங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் நாங்கள் முறையாக சீர்வரிசையுடன் சென்று கலந்து கொள்வோம்’’ என்றார்.