இந்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”கோயில்களில் தனியார் பிரசாதம் வழங்க அறநிலையத்துறை ஏன் அனுமதிக்கிறது?. கடைகளை தனியாருக்கு குத்தகைக்கு விடும் நிர்வாகம், பிரசாதத்தின் தரத்தை எப்படி உறுதி செய்கிறது என தெரியவில்லை.வணிக நடவடிக்கைகளுக்கான இடம் கோயில் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. பிரசாதம் வழங்குவதை வணிக நோக்கிலான நடவடிக்கை அல்ல என்கிறது அறநிலையத் துறை. அப்படி என்றால் தனியாருக்கு பதில் அறநிலையத்துறையே தரமான முறையில் பிரசாதங்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யலாம். கோயில் நிர்வாகமே தயாரித்து வழங்க முன்வர வேண்டும்.பிரசாதத்தை தயாரித்து வழங்குவதால் கோயில் நிர்வாகத்தின் வருவாயும் அதிகரிக்கும்,”இவ்வாறு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.