இந்நிலையில், கல்லா ஜெயதேவ் அரசியலில் களம் இறங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் சேவையில் இருந்த நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் பிரிவு உபச்சார விழா குண்டூரில் நேற்று நடந்தது. விழாவில் கல்லா ஜெயதேவ் கலந்து கொண்டு பேசியதாவது: ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது கடினம் என்பதால் தற்காலிகமாக அரசியலுக்கு ஓய்வு எடுத்துள்ளேன். ஆனால், திரும்ப வருவேன் என்றார்.