ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பின்றி உள்ளனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தங்களால் காவல் துறை மந்தமாகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக வலுவாக இருந்த சட்டம் ஒழுங்கும் அமைதியும் பாதுகாப்பும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. கவர்னர் உடனடியாக தலையிட்டு அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். தெலுங்கு தேசம் கட்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் சமூக ஊடகத்தினருக்கும் நாங்கள் துணை நிற்கிறோம் என ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பதிவு செய்துள்ளார்.