தெலங்கானாவில் மேலும் ஒரு பிஆர்எஸ் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

திருமலை: பிஆர்எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏவான பண்ட்லா கிருஷ்ண மோகன் ரெட்டி முதல்வர் ேரவந்த் ெரட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தெலுங்கானா மாநிலம் கட்வால் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ பண்ட்லா கிருஷ்ண மோகன் ரெட்டி முதலமைச்சரும், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஏற்கனவே பிஆர் கட்சியில் இருந்து 6 எம்எல்சிகளும், 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏவாக பண்ட்லா கிருஷ்ண மோகன் ரெட்டி இணைந்து இருப்பதால் பிஆர்எஸ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு