கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐஐடியில் தெலங்கானாவை சேர்ந்த ஐஸ்வர்யா புல்லூரி என்ற மாணவி பிடெக் 4ம் ஆண்டு படித்து வந்தார். டிச.31ம் தேதி அவரும், அவரது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்கள் புத்தாண்டை கொண்டாட ஆன்லைன் மூலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். புத்தாண்டு தினத்தில் காலையில் மாணவி ஐஸ்வர்யா மர்ம முறையில் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.