தெலங்கானா முதல்வர் கேசிஆரின் பெயரை கையில் பச்சை குத்திய பெண் அமைச்சர்

திருமலை: தெலங்கானா பெண் அமைச்சர் சத்யவதிரத்தோர், அங்கிருந்த கடையில் தெலங்கானா முதல்வர் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டார். தெலங்கானா மாநிலம் ஏற்பட்டு 10ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதிரத்தோர், பஞ்சாரா ஹில்ஸ், பஞ்சாரா பவனில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பழங்குடியினர் கலாச்சார விழாவில் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது ஒரு ஸ்டாலில் பச்சை குத்தும் கடையைப் பார்த்த அமைச்சர் சத்யவதிரத்தோர், முதல்வர் கே.சி.ஆர் பெயரை தனது கையில் பச்சை குத்திக்கொள்ள ஆசைப்பட்டார்.

அதற்கு பச்சை குத்தினால் வலிக்கும் என்று அமைப்பாளர்கள் கூறினர். ஆனால் கே.சி.ஆர் பெயரை பச்சை குத்தும்படி அமைச்சர் சத்யவதி கேட்டுக்கொண்டார். வலியை தாங்கிக்கொண்டு கேசிஆர் பெயரை பச்சை குத்திக்கொண்டார். ஏற்கனவே இதே அமைச்சர், முதல்வர் கே.சி.ஆரை 3 முறை முதல்வராக்கும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்துக்கொண்டு, கடந்த ஓராண்டாக செருப்பு அணியாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆமஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: மாயாவதி!

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

ஆர்ம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்