இதையடுத்து செய்தியாளர்கள் பாஜ – அதிமுக கூட்டணி முறிவு குறித்து கேட்டபோது, ‘‘நாம் நல்லவர்களைப் பற்றி பேசுவோம். அவர்களது கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் குறித்தும், பாஜ – ஓபிஎஸ் கூட்டணி குறித்தும் நாளை (இன்று) மாலை பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பேன்’’ என்றார். ‘என்டிஏ கூட்டணியில் நீங்கள் தொடர்கிறீர்களா’ என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார். அவருடன் இருந்த முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்வி குறித்து ஓபிஎஸ்சிடம் செல்போனில் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அவர், ‘‘என்டிஏ கூட்டணி என்பது எனது காதில் இந்தியா கூட்டணி என்று விழுந்ததால் பதிலளிக்கவில்லை. தேஜ கூட்டணி குறித்து பாஜ முறைப்படி அறிவித்த பிறகு, எங்கள் நிலையை தெரிவிக்கிறோம்’’ என்றார்.