ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் கழுத்தில் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோயில் பின்புறத்தில் உள்ள கடற்கரை அருகே முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டர். அங்கு, வாலிபர் பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதணைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், யாரேனும் கொலை செய்துவிட்டு உடலை இங்கு வீசிவிட்டுச் சென்றனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு