கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சஞ்சய்(19) என்பவர் 20 நாட்களாக தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தாய், தந்தையுடன் தற்காலிகமாக வசித்து வருகிறார். நேற்று மதியம் திடீரென சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சஞ்சய் மீது கொலை வழக்கு உள்ளதால் எளாவூர் பகுதிக்கு வந்ததாகவும், நண்பர்களை தொடர்பு கொண்டு பேச முடியாமல் தவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது வேறு காரணம் இருக்கிறதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.