அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோகுல் சரவணனையும், அவரது தாயார் இந்திராணியையும் தகாத வார்த்தையால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாய் மகனை வெட்டிவிட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
இதில் காயடைந்த சரவணன் அவரது தாய் இந்திராணி ஆகிய 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சரவணன் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிவிட்ட கோகுலை தேடி வருகின்றனர்.