இளம்பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை தட்டிக்கேட்ட தாய், மகனுக்கு வெட்டு: தலைமறைவு வாலிபருக்கு வலை

திருவள்ளூர்: இளம் பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை தட்டி கேட்ட தாய், மகனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய வாலிபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடம்பத்தூர் ஒன்றியம், போளிவாக்கம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் சரவணன்(47). இவரது தங்கை மகளான மகாலட்சுமியிடம் அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் மற்றும் அவரது தாயார் இந்திராணி ஆகியோர் கோகுலிடம் எதற்காக மகாலட்சுமியிடம் தகராறு செய்தாய் என தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோகுல் சரவணனையும், அவரது தாயார் இந்திராணியையும் தகாத வார்த்தையால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாய் மகனை வெட்டிவிட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இதில் காயடைந்த சரவணன் அவரது தாய் இந்திராணி ஆகிய 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சரவணன் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிவிட்ட கோகுலை தேடி வருகின்றனர்.

Related posts

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறையில் சோதனை