இளம்பெண்ணை மிரட்டி 5 ஆண்டாக பலாத்காரம் பாதிரியார் கைது

கயத்தாறு: இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு வழிபாட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த 2018ல் இங்கு பாதிரியாராக பணியாற்றிய வேலூர் மாவட்டம் எழில்நகர், பெரிய அல்லாபுரம் வினோத் ஜோஸ்வா (40), வித்யாவை ஏமாற்றி, மிரட்டி 2022 வரை 5 ஆண்டாக பலாத்காரம் செய்துள்ளார்.யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து இளம்பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, தற்போது வேலூரில் பணியாற்றும் பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு