இதுபற்றி வினோத்திடம் கூறிய இளம்பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு வினோத், தனக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு பெண் குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுபற்றி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வினோத் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.