தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.சென்னையில் விம்கோ நகர் – விமான நிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை, மாலை நேரத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதன் காரணமாக, இந்த நேரங்களில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், விம்கோநகர் – விமான நிலைய வழித்தடத்தில் நேற்று மதியம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால், விம்கோ நகர் – விமான நிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.உடனடியாக, மெட்ரோ ரயில் பொறியாளர்கள் விரைந்து வந்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். இதையடுத்து, 40 நிமிடங்களுக்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

 

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?