காங்கிரஸ் கட்சி என்ன இருக்கிறது. பணம் ஒன்றுமில்லை. தாமதமாக கணக்கு காட்டியதாக ரூ.200 கோடி அபராதம் போட்டால் எப்படி கட்டுவது. நாங்கள் வரி ஏய்ப்பு செய்யவில்லை. நீங்கள் (பாஜ) வன்முறையில் நம்பிக்கை உடையவர்கள். ஏனென்றால் மணிப்பூரில் அதை நீங்கள் செய்தீர்கள். வன்முறையை தொடுக்கிற அரசியல் இயக்கமாக பாஜ உள்ளது. தேர்தல் நன்கொடை என்கிற பெயர்களில் வங்கியில் மூலமாக பணத்தை பெறுவது தவறு. நாட்டை சீரமைக்கின்ற அரசியல் கட்சிகள் இதுபோன்ற செயல்கள் செய்வது தவறு. எங்களுடைய ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பிரதமர் இவர் தான் என்று சொல்லி தேர்தலை சந்தித்தது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.