தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு மீட்பு

ஊட்டி: குன்னூர் அருகே கோட்டக்கல் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.குன்னூர் அருகே கோட்டக்கல் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் மலை பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக அப்பகுதி தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைதொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தேயிலை தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து, கொலக்கொம்பை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் கொண்டு சென்று விடுவித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,‘கோட்டக்கல் தேயிலை தோட்டத்தில் 12 நீளம் உள்ள மலைப்பாம்பு இரையை உட்கொண்டு, அங்கிருந்து செல்ல முடியாமல் இருந்தது. இதனை பிடித்து அருகில் உள்ள காட்டிற்குள் கொண்டு சென்று விடப்பட்டது. எனவே, பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்’ என்றனர்.

Related posts

மொபட்-பைக் மோதல்; 3 பேர் பரிதாப பலி: பைக்-லாரி மோதி தம்பதி சாவு

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:துக்கம் தாளாமல் காதலனும் சாவு

பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி அதிமுக மாஜி எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி: தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு