அதில், தெய்வானை கடந்த 13.7.2010ல் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து, பொய்யான ஆவணங்களை வைத்து தனலட்சுமி என்பவர் செந்தில்குமாருக்கு நிலத்தை விற்றது தெரியவந்தது. இதற்கு பத்திர எழுத்தர் வைரமுத்து, சார்பதிவாளர் செந்தில்ராஜ்குமார் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின்படி சிவகாசி டவுன் போலீசார், சார்பதிவாளர் செந்தில்ராஜ்குமார், பத்திர எழுத்தர் வைரமுத்து உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.