இதற்கிடையே, அந்த ஆசிரியர் மீது நேற்று முன்தினம் மட்டும் அடுத்தடுத்து 7 மாணவிகள் தங்களது பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் மகேஸ்வரனை சரமாரியாக தாக்கி வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆசிரியர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.