மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் மகேஸ்வரன் (38) என்பவர் அங்கு படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை தனியார் லாட்ஜூக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது தாய் காப்பாற்றினார்.

இதற்கிடையே, அந்த ஆசிரியர் மீது நேற்று முன்தினம் மட்டும் அடுத்தடுத்து 7 மாணவிகள் தங்களது பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் மகேஸ்வரனை சரமாரியாக தாக்கி வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆசிரியர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது