இவ்விவகாரம் தொடர்பாக பெத்துல் போலீஸ் எஸ்பி சித்தார்த் சவுத்ரியிடம் அவர்கள் அளித்த புகார் மனுவில், ‘ஆசிரியையாக பணியாற்றிய உஷா சோனி, கடந்த 2013ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது பெயரில் ரூ.7.56 கோடி வரிபாக்கி நோட்டீசை வருமான வரித்துறை அனுப்பி உள்ளது. அந்த தொகையை செலுத்த எங்களிடம் வசதி கிடையாது. மேலும் உஷா சோனியின் ‘பான்’ எண் விபரங்களை, ‘நேச்சுரல் காஸ்டிங்’ என்ற நிறுவனம் பயன்படுத்தி உள்ளது. அவரது ‘பான்’ எண்ணை சட்டவிரோதமாக பயன்படுத்திய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உஷா சோனியின் பெயரில் பணப்பரிவர்த்தனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பெத்துல் போலீஸ் எஸ்பி சித்தார்த் சவுத்ரி கூறுகையில், ‘உஷா சோனியின் ‘பான்’ எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வருமான வரித்துறையிடம் தகவல் கேட்டுள்ளோம். அவர்களிடம் பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.