மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி டார்ச்சர் போக்சோவில் ஆசிரியர் கைது

சாத்தூர் : சாத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் தங்கப்பாண்டியன். திருமணமான இவர், அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியிடம் பழகினார். அந்த மாணவியிடம் செல்போன் இல்லாததால் அவரது தாய் செல்போன் நம்பரை வாங்கினார்.

அந்த எண்ணுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆபாச படங்கள் மற்றும் ஆபாச எஸ்எம்எஸ் வந்துள்ளன. ஆசிரியர் தங்கப்பாண்டியனின் மனைவி தனது கணவரின் செல்போனில் இருந்து மற்றொரு எண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த நம்பருக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். தகவலறிந்து மாணவியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.

இதையறிந்த மாணவியின் தந்தை போனை வாங்கி பார்த்தபோது, ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது ஆசிரியர் தங்கப்பாண்டியனின் செல்போனில் இருந்து அனுப்பப்பட்டது தெரிந்தது. இதையடுத்து மாணவியின் தந்தை சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் தங்கப்பாண்டியனை கைது செய்தனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை