இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளால், கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 32 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் மொத்தம் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்துள்ளது. அதே நேரத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் அதிகபட்சமாக 14,500 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். எச்.சி.எல் நிறுவனத்தில் 4,500 வேலை பறிபோய் உள்ளது. இது தவிர விப்ரோ நிறுவனத்தில் 7 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். பணித்திறன் சரியில்லை என்று கூறி பலரை வேலையைவிட்டு இந்த நிறுவனங்கள் அனுப்பி உள்ளன. அத்தோடு, வேலையைவிட்டு தானாக விலகுபவர்களின் பணியிடங்கள் காலியாகவே விடப்பட்டுள்ளன. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இன்னும் 3 மாதத்துக்கு நீட்டிக்கும் என்று பல ஐ.டி நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் 3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் ஆக்சென்சர் ஐ.டி நிறுவனம் இந்த ஆண்டு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடையாது என்று அறிவித்துள்ளது.
* இந்தாண்டு கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது அடுத்த ஆண்டு மார்ச்சில் இன்ஜினியரிங் படிப்பை முடிப்பவர்களை வேலைக்கு எடுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ இந்த ஆண்டு நடத்தப்போவதில்லை என்று இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.