விசாரணைக்கு சென்ற காவலரை தாக்கிய டெய்லர் கைது

சென்னை: சென்னை கானகத்தை சேர்ந்தவர் ரமேஷ்(50). டெய்லரான இவர், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பைக்கில் கோட்டூர்புரத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். போதையில் பைக்கை ஓட்ட முடியாமல் சாலையில் அருகில் சென்ற கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனை காரை ஓட்டி வந்த பிரகாஷ் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அவரை ரமேஷ் ஆபாசமாக பேசி தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், பைக் பதிவு எண்ணுடன் புகார் அளித்தார். அதன்படி போலீசார் ரமேஷ் வீட்டிற்கு ெசன்று விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் இருந்த ரமேஷ், காவலர்களை ஆபாசமாக பேசியது மட்டும் இல்லாமல், காவலர் ஒருவரை சட்டையை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததால் போலீசார் ரமேஷை கைது செய்யாமல் திரும்ப வந்துவிட்டனர். நேற்று டெய்லர் ரமேஷை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை