மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு30 உடன் இந்த சட்டத்திருத்தம் நேரடியாக மோதுவது குறித்தும், வக்பு சொத்து ஆக்கிரமிப்பாளர்களை நிலத்தின் உரிமையாளர்களாக மாற்றுவதற்கான சதி இந்த சட்டத்திருத்தத்தின் வாயிலாக செய்யப்படுகிறது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டன. இந்த சந்திப்பின் போது, வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் தங்கள் எதிர்ப்பை முன்னெப்போதையும் விட கூடுதலாக வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கை மனுவையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் அளித்தனர். இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் ஐ.அன்சாரி, ஏ.பெரோஸ் கான் ஆகியோர் உடனிருந்தனர்.