இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறியதாவது: சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் வாகனங்களுக்கான வாடகை உயரக்கூடும். இதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் மீது தான் விழும். அவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக சாமானிய மக்களின் வீடு கட்டும் செலவு, வணிக கட்டுமானங்களின் செலவு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே எம்சாண்ட், ஆற்றுமணல் உள்ளிட்ட பொருட்களை சென்னைக்கு எடுத்து வரும்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சுங்கவரியாக செலுத்த வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மேலும் சுங்க வரி உயர்வு எங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் சுங்கச்சாவடிகள் முழுவதும் அகற்றப்படும் என்று அறிவித்துள்ளார். இதனை வரவேற்கிறோம் என்றார்.