தார் சாலை பணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் தார் சாலை போடும் பணிக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. கந்தர்வகோட்டை பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி பஞ்சநாதன் என்பவர் ஐகோர்ட் கிளை மனு தாக்கல் செய்திருந்தார். நீர் செல்லும் வழித்தடத்தில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related posts

கேரளாவில் வங்கி சிடிஎம் இயந்திரத்தில் ரூ.2.24 லட்சம் கள்ளநோட்டுகள்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்