இந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் விமல், வையாபுரி, நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா, ஆன்மீக சொற்பொழிவாளர் சோசோ மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாகனங்கள் மூலம் அன்னதானமும் வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தன்வீர் தயானந்த கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு தொண்டு பணிகளை செய்து வருகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, பல்வேறு கோவில்களின் பராமரிப்பு மற்றும் கோவில் விழாக்களுக்கான உதவி, கலாச்சார போதனைகள், யோகா மற்றும் தியான நுற்பங்கள் கற்பித்தல், சித்த மருந்துகள், வர்ம சிகிச்சை, ஜாதகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை சமுதாயத்திற்கு கற்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.