சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில், கட்சியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வரும் 4.11.2023 (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தஞ்சை மாநகரில் நடைபெற உள்ள 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.