பின்னர் காலை 11.30 மணியளவில் பேராலயத்தில் இருந்து ஒன்றரை கிமீ தொலைவில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு 5 பேரும் குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாத 5 பேரும், ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கினர். வெகுநேரமாகியும் 5 பேரும் கரைக்கு வராததால் அங்கு குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடினர். அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு பிராங்க்ளின், ஆண்டோ ஆகியோரது உடல்களை மீட்டனர். மேலும் 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.