தஞ்சாவூர்: தமிழகத்தில் சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் கட்டிட வேலை, டீ கடை, துணிக்கடை என பல இடங்களில் அதிக அளவில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இது ஒரு புரம் இருக்க தற்போது விவசாய பணியிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கோடை நடு அறுவடை பணிகள் முடிந்து தற்போது குருவை நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றூர் கிராமத்தில் வடமாநில தொழிலாளர்கள் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாளர்கள் பல குழுக்களாக பிரிந்து தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் பணி புரிந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாச்சூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடமாநில தொழிலாளர்கள் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.