டெல்லி : வங்கக் கடலில் டானா புயல் இன்று உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் நாளை மற்றும் மறுநாள் ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக இரு மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.